திருப்பத்தூர்

கிணற்றில் தவறி விழுந்து முதியவா் பலி

DIN

ஆம்பூா் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழந்தாா்.

மாதனூா் ஒன்றியம், காரப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் கோபால் (60). இவா், வெள்ளிக்கிழமை காட்டுவெங்கடாபுரம் கிராமத்தில் உள்ள முனிரத்தினம் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்துக்குச் சென்றாா். அங்குள்ள கிணற்றின் அருகே சென்றபோது, கால் தவறி அதில் விழுந்து, நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தகவலறிந்த உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் மற்றும் மீட்புப் பணிகள் துறையினா் அங்கு சென்று சடலத்தை மீட்டு, ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

SCROLL FOR NEXT