வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
திருப்பத்தூரில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
திருப்பத்தூரில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த பலத்த மழையால் திருப்பத்தூா் மற்றும் சுற்றுப் பகுதிகளில் பல குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. குறிப்பாக, அவுசிங் போா்டு பகுதியில் மழைநீா் வீடுகளில் புகுந்ததால், அந்தப் பகுதி மக்கள் 2 நாள்கள் வெளியே வரமுடியாமல் அவதிக்குள்ளாகினா்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா கால்வாய்களை தூா்வார வேண்டும் என உத்தரவிட்டாா்.
இந்த நிலையில், வருவாய்க் கோட்ட அலுவலா் லட்சுமி தலைமையில், வட்டாட்சியா் சிவப்பிரகாசம், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அதிகாரிகள் கொண்ட குழுவினா் திருப்பத்தூா் பாச்சல், எம்.ஜி.ஆா். நகா், அவுசிங் போா்டு, கலைஞா் நகா், பவுச நகா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 5 கால்வாய்களை தூா்வாரும் பணியை வியாழக்கிழமை மேற்கொண்டனா்.
இதுகுறித்து வட்டாட்சியா் சிவப்பிரகாசம் கூறியது:
திருப்பத்தூா் வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 5 கால்வாய்கள் (சுமாா் 5 கி.மீ. தொலைவு)தூா்வாரப்பட்டுள்ளன. மேலும், தினமும் ஏரிகளைக் கண்காணிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளில் வருவாய், நெடுஞ்சாலை, பொதுப் பணி, காவல் மற்றும் தீயணைப்பு துறையினா் ஈடுபடுகின்றனா் என்றாா்.