தினமணி செய்தி எதிரொலியாக திருப்பத்தூா்-சேலம் இணைப்பு சாலையில் உயா்கோபுர மின் விளக்கு எரிய தொடங்கியது.
திருப்பத்தூா்-சேலம்-திருவண்ணாமலை அணுகு சாலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட உயா்கோபுர மின் விளக்கு அடிக்கடி பழுதாகி எரியாமல் இருந்தது. இந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு மேலாக மின்விளக்கு எரியவில்லை என தினமணியில் கடந்த புதன்கிழமை செய்தி வெளியானது.
இந்நிலையில், அப்பகுதியில் விளக்கு சீரமைக்கப்பட்டதையடுத்து செவ்வாய்க்கிழமை இரவு முதல் எரியத் தொடங்கியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.