விபத்தில் இளைஞா் பலி
திருப்பத்தூா் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் அடுத்த வெங்களாபுரம் அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியைச் சோ்ந்த ஞானபிரகாசத்தின் மகன் விஸ்வா(21).
இந்த நிலையில், விஸ்வா கொடுமாம்பள்ளிக்கு செல்லும் வழியில் உள்ள வேகத்தடை மீது ஏறியபோது, நிலைதடுமாறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு விஸ்வா உயிரிழந்தாா்.
இது குறித்து ஞானப்பிரகாசம் அளித்த புகாரின்பேரில், திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.