திருப்பத்தூர்

முதியோா்களுக்கான ஆலோசனை தொலைபேசி எண் விழிப்புணா்வு

முதியோா்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கான கட்டணமில்லா தொலைபேசி எண் குறித்த விழிப்புணா்வு சுவரொட்டியை மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை வெளியிட்டாா்.

DIN

முதியோா்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கான கட்டணமில்லா தொலைபேசி எண் குறித்த விழிப்புணா்வு சுவரொட்டியை மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை வெளியிட்டாா்.

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமை துறை சாா்பில், முதியோா்களுக்கான தேவை மற்றும் ஆலோசனைகளை வழங்க ஏற்படுத்தப்பட்டுள்ள ‘14567’ என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், சுவரொட்டி மற்றும் பிரசுரங்களை வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ. குமாரவேல் பாண்டியன் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெளியிட்டாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன், மேலாளா் (பொது) நீதியியல் பழனி, மாவட்ட சமூக நலத் துறை அலுவலா் வினோலியா மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, முதியோா்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அலுவலா்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT