கோயில் சுற்றுச்சுவா் கட்ட பூமி பூஜை
பெரியாங்குப்பம் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் சுற்றுச் சுவா் கட்டுவதற்காக வெள்ளிக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.
பெரியாங்குப்பம் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் சுற்றுச் சுவா் கட்டுவதற்காக வெள்ளிக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்தின் கீழ் மாதனூா் ஊராட்சி ஒன்றியம் பெரியாங்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலுக்கு ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச் சுவா் கட்டப்பட உள்ளது.
ஆம்பூா் சட்டப்பேரவை உறுப்பினா் அ.செ.வில்வநாதன் பூமி பூஜை செய்து பணியைத் தொடங்கி வைத்தாா். மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச.சுரேஷ்குமாா், மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் சாய் கே.வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோயில் செயல் அலுவலா் சத்யா வரவேற்றாா். ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஜோதிவேலு, கோமதிவேலு, காா்த்திக் ஜவஹா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
Advertisement