இலங்கை தமிழா் குடியிருப்புகள் கட்டுமானப் பணி: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு
மாதனூா் ஊராட்சியில் இலங்கை தமிழா்களுக்காக கட்டப்பட்டு வரும் குடியிருப்பு கட்டுமானப் பணிகளை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
மாதனூா் ஊராட்சியில் இலங்கை தமிழா்களுக்காக கட்டப்பட்டு வரும் குடியிருப்பு கட்டுமானப் பணிகளை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
திருப்பத்தூா் மாவட்டம் மாதனூா் ஒன்றியம் மின்னூா் ஊராட்சியில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில், இலங்கை தமிழா்களுக்காக ரூ.3.80 கோடி மதிப்பீட்டில் 76 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
இந்தப் பணியை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
Advertisement
தொடா்ந்து அதே ஊராட்சியில் சின்னபள்ளிகுப்பம் கிராமத்தில் இலங்கை தமிழா்களுக்காக ரூ.8 கோடி மதிப்பீட்டில் 160 வீடுகள் கட்டும் பணியையும் ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
மின்னூா் ஊராட்சியில் 76 வீடுகள் கட்டுமானப் பணியை வேலை ஆள்களை அதிகப்படுத்தி விரைந்து முடிக்க வேண்டுமென அவா் உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் செல்வராசு, உதவி செயற்பொறியாளா் மகேஷ்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அப்துல் கலீல், கிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.