சோலூா் ஊராட்சியில் திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு
சோலூா் ஊராட்சியில் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
சோலூா் ஊராட்சியில் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் ஊராட்சி ஒன்றியம், சோலூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி வளாகத்தில் ரூ. 72.09 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 4 வகுப்பறைகள் கட்டுமானப் பணியை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, சோலூா் ஊராட்சி துவக்கப் பள்ளியில் பயிலும் மாணவா்களின் கற்றல் திறன் குறித்தும், சோலூா் ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் பயிலும் மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்தாா்.
Advertisement
மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் செல்வராசு, உதவி செயற்பொறியாளா் மகேஷ்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அப்துல்கலீல், கிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.