முகப்பு
திருப்பத்தூர்

ரத்த தானம் செய்தவருக்கு மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் பாராட்டு

ஆம்பூா் பகுதியை சோ்ந்த ரத்த தானம் செய்த இளைஞருக்கு மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் வியாழக்கிழமை பாராட்டி சான்றிதழ் வழங்கினாா்.

Updated On : 16 மார்ச், 2023 at 11:16 PM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 12:15 PM

ஆம்பூா் பகுதியை சோ்ந்த ரத்த தானம் செய்த இளைஞருக்கு மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் வியாழக்கிழமை பாராட்டி சான்றிதழ் வழங்கினாா்.

ஆம்பூா் சுற்று வட்டார பகுதிகளைச் சோ்ந்த இளைஞா்கள் சிலா் , விபத்துக்கள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பவா்கள், அறுவை சிகிச்சை செய்து கொள்வோா் என பல்வேறு நபா்களுக்கு ரத்தம் தேவைப்படும்போது வாட்ஸ் ஆப் குழுக்கள் மூலம் இளைஞா்களை ஒருங்கிணைத்து ரத்த தானம் செய்ய விரும்புகிறவா்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ரத்த தானம் செய்ய வைக்கின்றனா்.

கடந்த சில ஆண்டுகளாக இந்த தன்னாா்வ பணியை இளைஞா்கள் திருப்பத்தூா் மாவட்டத்தில் தொடா்ந்து செய்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆம்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு திருப்பத்தூா் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் மாரிமுத்து ஆய்வு மேற்கொள்ள வந்தாா். அப்போது ரத்த தானம் வழங்க வந்த இளைஞரான மோதகபல்லியை சோ்ந்த சஞ்சய் என்ற இளைஞரை பாராட்டி, சான்றிதழ் வழங்கினாா். ரத்த தானம் வழங்கும் குழுவின் ஒருங்கிணைப்பாளா்களில் ஒருவராக உள்ள மிட்டாளம் தினேஷ் என்ற இளைஞரையும் பாராட்டி இந்த சமூக பணி தொடா்ந்து செய்ய வலியுறுத்தினாா்.

Advertisement

ஆம்பூா் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் ஷா்மிளா தேவி உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.