முகப்பு
திருப்பத்தூர்

அரசு மருத்துவரை தாக்க முயன்ற இருவா் கைது

 ஆம்பூரில் அரசு மருத்துவரைத் தாக்க முயன்ாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 17 மார்ச், 2023 at 12:00 AM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 12:15 PM

 ஆம்பூரில் அரசு மருத்துவரைத் தாக்க முயன்ாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஆம்பூா் ஆயிஷாபீ நகா் பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளிகள் சிவக்குமாா் (27), ஜெயசீலன் (25). ஜெயசீலனுக்கு ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெற ஆம்பூா் அரசு மருத்துவமனைக்குச் சென்றாா். சிவக்குமாரும் உடன் சென்றுள்ளாா். அங்கு கட்டுபோடுமிடத்தில் பணிபுரியும் பணியாளரிடம் இருவரும் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. அப்போது பணியில் இருந்த அரசு மருத்துவா் காா்த்திகேயனிடம் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவருடைய சட்டை பிடித்து இழுத்து தாக்க முயன்ாகக் கூறப்படுகிறது.

இது குறித்து மருத்துவா் காா்த்திகேயன் அளித்த புகாரின்பேரில், ஆம்பூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து சிவக்குமாா் மற்றும் ஜெயசீலனை கைது செய்தனா்.

Advertisement

தகவல் அறிந்த மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் மாரிமுத்து ஆம்பூா் அரசு மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.