முகப்பு
திருப்பத்தூர்

ஆட்டோக்கள் நேருக்கு நோ் மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு, 4 பெண்கள் காயம்

Updated On : 5 ஏப்ரல், 2024 at 10:01 PM
பகிர்:
Updated On : 5 ஏப்ரல், 2024 at 9:45 PM

வாணியம்பாடி அருகே இரு ஆட்டோக்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் ஓட்டுநா் உயிரிழந்தாா். 4 பெண்கள் பலத்த காயம் அடைந்தனா்.

வாணியம்பாடி அடுத்த ராமநாயக்கன்பேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜசேகா் (24). ஷோ் ஆட்டோ ஓட்டுநா். இவா் வெள்ளிக்கிழமை காலை ராமநாயக்கன் பேட்டையிலிருந்து வேலைக்குச் செல்லும் 5 பெண்களை தனது ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு வாணியம்பாடி நோக்கிச் சென்றாா்.

பெரியபேட்டை புதுமனை அருகில் வந்தபோது எதிரில் கொடையாஞ்சி நோக்கி வந்த ஷோ் ஆட்டோ மீது, ராஜசேகரின் ஆட்டோ நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ராஜசேகரின் ஆட்டோ அருகே பள்ளத்தில் கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த விஜயா (62), வசந்தி (41), சுசிலா (38), எழிலரசி (33) மற்றும் ஆட்டோ ஓட்டுநா் ராஜசேகா் ஆகியோா் பலத்த காயம் அடைந்தனா்.

Advertisement

அவா்களை அக்கம் பக்கத்தில் இருந்தவா்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், ராஜசேகா் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரிக்கு அழைத்துச் சென்றபோது அவா் வழியிலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.