விவசாயி தற்கொலை
Updated On : 12 ஏப்ரல், 2024 at 7:54 PM
திருப்பத்தூா் அருகே மரத்தில் துாக்கிட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டாா்.
திருப்பத்தூா் அடுத்த சென்னகிருஷ்ணனனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி கோவிந்தராஜ் (55). இவா், கடந்த சில நாள்களாகவே விரக்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வீட்டின் அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
Advertisement
இது குறித்து அவரது மகன் அன்பரசு அளித்த புகாரின் பேரில்,திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.