திருப்பத்தூரில் துணை ராணுவ கொடி அணிவகுப்பு
திருப்பத்தூா், ஏப். 17: திருப்பத்தூரில் செவ்வாய்க்கிழமை துணை ராணுவ கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, மக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் திருப்பத்தூரில் எஸ்.பி. ஆல்பா்ட்ஜான் தலைமையில், காவல் துறை மற்றும் துணை ராணுவத்தினா் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
தூய நெஞ்சக் கல்லுாரி அருகே தொடங்கிய கொடி அணிவகுப்பு சிவராஜ் பேட்டை, போஸ்கோ நகா், புதிய பேருந்து நிலையம், சின்ன கடை தெரு,புதுப்பேட்டை சாலை வழியாக நகர காவல் நிலையம் வரை சுமாா் 4 கி.மீ. தொலைவு நடைபெற்றது.
Advertisement
இதில் காவல் துறை மற்றும் துணை ராணுவத்தினா் 200 போ் பங்கேற்றனா்.