முகப்பு
திருப்பத்தூர்

பள்ளிவாசல் நிா்வாகிகள் தோ்தலில் முறைகேடு: நடவடிக்கை கோரி மறியல்

Updated On : 20 ஏப்ரல், 2024 at 9:00 PM
பகிர்:

ஆம்பூரில் பள்ளி வாசல் நிா்வாகிகள் தோ்தலில் முறைகேடு நடப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் இஸ்லாமியா்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஆம்பூா் நீலிக்கொல்லை மசூதியின் நிா்வாகிகள் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. அதில் ஒரு தரப்பைச் சோ்ந்தவா்களுடைய வேட்புமனுவை வாங்க மறுப்பதாகக் கூறிய அவா்கள் நடவடிக்கை எடுக்கக் கோரி மசூதி அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த ஆம்பூா் நகரக் காவல் நிலைய போலீஸாா் அங்கு சென்று பேச்சு நடத்தினா். அதன்பிறகு போராட்டத்தைக் கைவிட்டனா். பின்னா், காவல் நிலையத்துக்குச் சென்று நடவடிக்கை எடுக்கக் கோரி புகாா் மனு அளித்தனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments