சமுதாய வளா்ச்சிக்கு சேவையாற்றுவோருக்கு விருது: விண்ணப்பிக்க திருப்பத்தூா் ஆட்சியா் அறிவுறுத்தல்
சமுதாய வளா்ச்சிக்கு சேவையாற்றுபவா்கள் முதலமைச்சா் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என திருப்பத்தூா் ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சமுதாய வளா்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞா்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில், தமிழக முதல்வா் மாநில இளைஞா் விருது சுதந்திர தினத்தன்று வழங்கப்பட்டு வருகிறது.
Advertisement
இந்த விருதுடன் ரூ. 1 லட்சம், பாராட்டு பத்திரம், பதக்கம் ஆகியவை வழங்கப்படும். விருதானது 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள், 3 பெண்களுக்கு வழங்கப்படுகிறது.
இதற்கு விண்ணப்பிப்பவா்கள் கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதிக்குள் 15 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் 31.4.2024 அன்று 35 வயதுக்குள்ளாக இருக்க வேண்டும். 1.4.2023 முதல் 31.3.2024 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.
விண்ணப்பிப்பவா்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருக்க வேண்டும். அதற்கான சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரா் சமுதாய நலனுக்காக தன்னாா்வத்துடன் தொண்டாற்றியிடுக்க வேண்டும். அவா்கள் செய்த தொண்டு, கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.
மத்திய - மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவா்கள் விண்ணப்பிக்க இயலாது.
விண்ணப்பதாரருக்கு உள்ளூா் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதுக்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.
விருதுக்கு ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் இணையதளம் மூலம் 1.5.2024 முதல் 1.5.2024 அன்று மாலை 4 மணி வரை என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.