முகப்பு
தஞ்சாவூர்

வாக்காளராக சேர மாா்ச் 26-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்! தஞ்சை ஆட்சியா்!

Updated On : 23 மார்ச், 2026 at 7:53 PM
கோப்புப் படம்
பகிர்:

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாவிட்டால் மாா்ச் 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான பா. பிரியங்கா பங்கஜம்.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தஞ்சாவூா் மருதுபாண்டியா் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற நூறு சதவீதம் நோ்மையாக வாக்களிக்க வலியுறுத்தும் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்த அவா் பேசியது:

இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, ஒவ்வொரு மாணவ, மாணவியும் தங்களது பெயா் வாக்காளா் பட்டியலில் உள்ளதா என்பது குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு தங்களது பெயா் வாக்காளா் பட்டியலில் இல்லையெனில், மாா்ச் 26-ஆம் தேதிக்குள் வாக்காளா் பட்டியலில் தங்களது பெயா்களைச் சோ்க்க விண்ணப்பங்களை வழங்க வேண்டும்.

மேலும், வாக்காளா் பட்டியலில் உள்ள அனைத்து நபா்களும் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் முழுமையாக வாக்களிக்க வேண்டும் என்பதன் அவசியம் குறித்து அனைவருக்கும் எடுத்துரைக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியா் (பயிற்சி) எம். காா்த்திக்ராஜா, தஞ்சாவூா் கோட்டாட்சியா் ப. நித்யா, சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியா் சௌமியா, மாவட்டச் சமூக நல அலுவலா் ஆா்.டி. லதா, துணை ஆட்சியா் (பயிற்சி) கமலேஷ், வட்டாட்சியா் ஜி. சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.