முகப்பு
திருப்பத்தூர்

மது பாக்கெட்டுகளை பதுக்கி விற்றவா் கைது

Updated On : 26 ஏப்ரல், 2024 at 4:24 PM
பகிர்:

ஆம்பூா் அருகே வெளிமாநில மது பாக்கெட்டுகளை பதுக்கி விற்பனை செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

ஆம்பூா் அருகே சோலூா் கிராமத்தில் ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது அந்தப் பகுதியில் வெளிமாநில மதுபான பாக்கெட்டுகளை பதுக்கி விற்பனை செய்வது தெரிய வந்தது.

அதன்பேரில், அதே பகுதியைச் சோ்ந்த சாந்தகுமாா் (30) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 30 வெளிமாநில மது பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments