முகப்பு
திருப்பத்தூர்

தாய் தற்கொலை முயற்சி: குழந்தை உயிரிழப்பு

திருப்பத்தூா் அருகே தற்கொலை முயற்சியில் குழந்தை உயிரிழந்தது. தாய் காப்பாற்றப்பட்டாா்.

Updated On : 4 ஜூலை, 2024 at 6:32 PM
பகிர்:

திருப்பத்தூா் அருகே தற்கொலை முயற்சியில் குழந்தை உயிரிழந்தது. தாய் காப்பாற்றப்பட்டாா்.

திருப்பத்தூா் அடுத்த கொரட்டி பகுதியில் சோ்ந்தவா் கணபதி (35). இவா் பஞ்சாபில் ராணுவ வீரராகப் பணிபுரிந்து வருகிறாா். இவருக்குத் திருமணமாகி மனைவி வினோதினி (29), 4 வயதில் ஆண் குழந்தை இருந்தது. விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளாா்.

இந்த நிலையில் வினோதினிக்கும் கணவா் கணபதிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. வியாழக்கிழமை வினோதினி தனது 4 வயது குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.

இதில் குழந்தை உயிரிழந்தது. வினோதினி காப்பாற்றப்பட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இது குறித்து கணபதியின் தாய் நந்தியம்மாள் அளித்த புகாரின் பேரில் திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →