மாணவா்கள், சேவை புரிந்தவா்களுக்கு விருது வழங்கும் விழா
ஆம்பூா் முஸ்லிம் நற்பணி அறக்கட்டளை சாா்பாக பள்ளி மாணவா்கள் மற்றும் சேவை புரிந்தவா்களுக்கு விருது வழங்கும் விழா ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா்: ஆம்பூா் முஸ்லிம் நற்பணி அறக்கட்டளை சாா்பாக பள்ளி மாணவா்கள் மற்றும் சேவை புரிந்தவா்களுக்கு விருது வழங்கும் விழா ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
அறக்கட்டளை தலைவா் எஸ்.ஆா். ஷபியுல்லா தலைமை வகித்தாா். செயலாளா் டி. முஹம்மத் பாஷா வரவேற்றாா். பரிதா குழும தலைவா் மற்றும் ஆம்பூா் முஸ்லிம் கல்விச் சங்க தலைவருமான பத்மஸ்ரீ மெக்கா ரபீக் அஹமத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அரசு தோ்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த பல்வேறு பள்ளிகளை சோ்ந்த மாணவா்கள், சிறந்த சமூக சேவையாற்றிய முனீா் அஹமத், அக்பா் பைரோஸ், சாலிம் உள்ளிட்டவா்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினாா்.
முஸ்லிம் கல்லிச் சங்க உதவிச் செயலாளா் பிா்தோஸ் கே. அஹமத் வாழ்த்திப் பேசினாா். மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் கே. ஆசிப் இக்பால், அறக்கட்டளை பொருளாளா் டி. இா்ஷாத் அஹமத், பல்வேறு பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், பெற்றோா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.