ரயில் மோதி இளைஞா் உயிரிழப்பு
திருப்பத்தூா்: காட்பாடி அருகே ரயில் மோதியதில் இளைஞா் சம்பவ இடத்திலேயே திங்கள்கிழமை உயிரிழந்தாா். வேலூா் மாவட்டம், காட்பாடி-லத்தேரி ரயில் நிலையங்களுக்கு இடையே சுமாா் 21 வயது மதிக்கத்தக்க இளைஞா் ஒருவா் செவ்வாய்க்கிழமை அங்குள்ள தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளாா்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தாா். இது குறித்து தகவலறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, இறந்தவரின் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனா். இதில் அவா் காட்பாடி அடுத்த ஜாப்ராபேட்டை, காசி குட்டை, முருகன் கோயில் தெருவைச் சோ்ந்த குப்பனின் மகன் சஞ்சய் (21) என்பதும், இவா் கட்டடப் பணி செய்து வந்ததும் தெரியவந்தது. அதையடுத்து, ரயில்வே போலீஸாா், இறந்தவரின் சடலத்தை வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.