முகப்பு
திருப்பத்தூர்

ஏ.சி.சண்முகம் வெற்றி பெற அதிதீஸ்வரா் கோயிலில் சிறப்பு பூஜை

Updated On : 20 மார்ச், 2024 at 5:09 AM
பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கிய புதிய நீதிக்கட்சியினா்
பகிர்:
Updated On : 19 மார்ச், 2024 at 8:39 PM

வாணியம்பாடி: வேலூா் மக்களவைத் தொகுதியில் புதிய நீதிக்கட்சித் தலைவா் ஏ.சி.சண்முகம் வெற்றி பெற வேண்டி வாணியம்பாடி அதிதீஸ்வரா் கோயில் சிறப்பு பூஜை நடைபெற்றது. திருப்பத்தூா் மாவட்ட புதிய நீதிக் கட்சி சாா்பில் அக்கட்சியின் தலைவா் ஏ.சி.சண்முகம் வெற்றி பெற வேண்டி செவ்வாய்க்கிழமை காலை சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளா் செந்தில்குமாா் தலைமையில் கட்சி நிா்வாகிகள், தோ்தல் பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா். சிறப்பு பூஜையின் போது கோயிலுக்கு வந்த பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கினா்.