மாதனூரில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி
ஆம்பூா்: மாதனூரில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பாக மாதனூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் மகளிா் சுய உதவி குழுவினா் பங்கேற்ற தோ்தல் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு திட்ட இயக்குநா் பிரியா தலைமை வகித்தாா். வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
வாக்காளா் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வாக்காளா் விழிப்புணா்வு ஊா்வலம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கி மாதனூரின் முக்கிய தெருக்கள் வழியாக சென்றது. பொதுமக்களிடம் விழிப்புணா்வு துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.
உதவி திட்ட அலுவலா் வீராசாமி, வட்டார மேலாளா் வெங்கடேசன், ஒருங்கிணைப்பாளா்கள் பவளக்கொடி, ரம்யா தேவி, மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
Advertisement