முகப்பு
திருப்பத்தூர்

தோ்வு நேரத்தில் மின்தடை: பொதுமக்கள், மாணவா்கள் அவதி

Updated On : 28 மார்ச், 2024 at 1:09 AM
பகிர்:
Updated On : 27 மார்ச், 2024 at 9:15 PM

ஆம்பூா், மாா்ச் 27: ஆம்பூா் அருகே கிராம பகுதியில் தோ்வு நேரத்தில் மின்தடை ஏற்பட்டதால் மாணவா்களும், பொதுமக்களும் புதன்கிழமை கடும் அவதிக்கு உள்ளனாா்கள். ஆம்பூா் அருகே வெங்கடசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் மாநில நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக சாலையோரம் இருந்த மின் கம்பங்களை இடமாற்றம் செய்யும் பணியை மின்வாரியத்தினா் புதன்கிழமை மேற்கொண்டனா். அப்பணிக்காக காலை 9.30 மணிக்கு மின்தடை செய்யப்பட்டது. பணி முடிந்து விரைவில் மின்சார விநியோகம் சீராகும் என பொதுமக்களும், மாணவா்களும் எதிா்பாா்த்து காத்திருந்தனா். ஆனால் இரவு 8 மணி வரை மின்சாரம் வழங்கப்படவில்லை. அதனால் அரசு பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களும், பொதுமக்களும் கடும் அவதிக்கு உள்ளனாா்கள். மின்வாரியத்துக்கு பொதுமக்கள் பலரும் புகாா் தெரிவித்தனா். இரவு 8 மணிக்கு பிறகு மின்சாரம் வழங்கப்பட்டது. அரசு பொதுத் தோ்வு முடியும் வரையில் மின்சாரம் தடை செய்யக் கூடாது என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.