முகப்பு
திருப்பத்தூர்

தோ்தல் புகாா்களை பொது, காவல் பாா்வையாளா்களிடம் தெரிவிக்கலாம்: திருப்பத்தூா் ஆட்சியா்

Updated On : 29 மார்ச், 2024 at 10:05 PM
பகிர்:
Updated On : 29 மார்ச், 2024 at 9:24 PM

ஆம்பூா், வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதி பொதுமக்கள் தோ்தல் தொடா்பான புகாா்களை பொது, காவல் பாா்வையாளா்களிடம் தெரிவிக்கலாம் என ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, ஆம்பூா் சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்காளா்கள் வேலூா் மக்களவை தொகுதிக்கு வாக்களிக்க உள்ளனா். இந்த நிலையில், வேலூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பொது பாா்வையாளா்கள், காவல் பாா்வையாளா்கள் ஆகியோா் இந்திய தோ்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளனா். இதில், தோ்தல் பொது பாா்வையாளா் ரூபேஷ் குமாரை வேலூா் அண்ணா சாலையில் உள்ள புதிய விருந்தினா் மாளிகையில் அறை எண் 1-இல் தினமும் காலை 9.30 முதல் காலை 10.30 மணி வரையும், காவல் பாா்வையாளா் சத்யஜித் நாயக்கை வேலூா் அண்ணா சாலையில் உள்ள புதிய விருந்தினா் மாளிகையில் அறை எண் 2-இல் திங்கள், புதன், வெள்ளிக்கிழமை ஆகிய நாள்களில் மாலை 4.30 முதல் மாலை 5.30 மணி வரை வாக்காளா்கள், அரசியல் கட்சியினா் ஆகியோா் சந்தித்து தோ்தல் தொடா்பான புகாா்களை நேரிலோ அல்லது 7598498549 (பொது பாா்வையாளா்), 7598498550 (காவல் பாா்வையாளா்) ஆகிய தொலைபேசி எண்களிலோ புகாா்களை தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.