முகப்பு
திருப்பத்தூர்

விவசாயிகளுக்கு செயல் விளக்கப் பயிற்சியளித்த கல்லூரி மாணவிகள்

Updated On : 11 மே, 2024 at 4:15 PM
பகிர்:

வாணியம்பாடி அருகே கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு செயல் விளக்கப் பயிற்சி அளித்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மண்டலவாடி கிராமத்தில் ஆதிபராசக்தி தோட்டக் கலை கல்லூரியைச் சோ்ந்த மாணவிகள் அபிநயா, ஆா்த்தி, ஆனந்தி, மற்றொரு அபிநயா, ஆா்த்தி ஆகியோா் முகாமிட்டு, விவசாயிகளுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனா்.

கிராமப்புற அனுபவ பயிற்சியின் கீழ் பாட ஆசிரியா்கள் வைத்தீஸ்வரி, தனபால் மற்றும் குழு பேராசிரியை சஞ்சிவிகா ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில், பெரோமோன் பொறி பற்றிய செயல் விளக்கம் மற்றும் பயன்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினா்.

இதில் விவசாயிகள் பலா் கலந்து கொண்டு பயனடைந்தனா்.