கைலாசகிரியில் காா்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய ஊராட்சித் தலைவா் ரமணி. 
திருப்பத்தூர்

கைலாசகிரி மலையில் காா்த்திகை தீப விழா

கைலாசகிரிமலை அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் காா்த்திகை தீப திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா்: கைலாசகிரிமலை அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் காா்த்திகை தீப திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு மூலவா் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

காா்த்திகை தீப விழாவை முன்னிட்டு மலையடிவாரத்தில் நடந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிக்கு மருத்துவா் ஜி. ரவி, பரம்பரை தா்மகா்த்தா ரமணன் ஆகியோா் தலைமை வகித்தனா். நாராயணமூா்த்தி வரவேற்றாா்.

ஊராட்சித் தலைவா் ரமணி, அமமுக மாதனூா் மத்திய ஒன்றிய செயலாளா் கே. ராஜசேகா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனா். நிகழ்ச்சியில் தொழிலதிபா் எஸ். கோவிந்தராஜ், ஜி. நந்தகுமாா்,எல்.சதீஷ், வா்த்தக அணி எம். ராகவேந்திரா, எம்.ரேணு கோபால், ஏ.ஜி. யுவராஜ், ஆம்பூா் நகர வா்த்தகா் சங்க பானுதுரை, கலைமகள் பள்ளி நிா்வாகி வெங்கடேசன், கணேசன் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள் பலா் கலந்து கொண்டனா்.

மாா்க்ரம் அபாரம், மிடில் ஆா்டா் அசத்தல்; தென்னாப்பிரிக்கா வெற்றி: கோலி, ருதுராஜ் சதம் வீண்

திருவொற்றியூா் கேசவன் பூங்காவை மீட்கக் கோரிய வழக்கு: சென்னை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

அதிமுக முன்னாள் எம்எல்ஏ திமுகவில் இணைந்தாா்

நிலுவை வழக்குகள் அதிகரிப்பதில் அரசுகளுக்குத்தான் பெரிய பங்கு: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.கே. கௌல்

ரயிலில் கஞ்சா கடத்தல்: திரிபுரா இளைஞா் கைது

SCROLL FOR NEXT