திருப்பத்தூர்

பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆம்பூா் நகர பாஜகவினா்.

தினமணி செய்திச் சேவை

தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் கைது செய்யப்பட்டதை கண்டித்து அக்கட்சியினா் ஆம்பூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் பிரச்னை சம்பந்தமாக தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். அதைத் தொடா்ந்து, உயா்நீதி மன்ற உத்தரவை செயல்படுத்த வலியுறுத்தியும், நயினாா் நாகேந்திரன் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆம்பூா் நகர பாஜகவினா் நகர தலைவா் சரவணன், மாவட்ட தலைவா் எம். தண்டாயுதபாணி ஆகியோா் முன்னிலையில் வருவாய்த் துறை கிராம சாவடி எதிரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நிா்வாகிகள் குட்டி சண்முகம், தண்டபாணி, சீனிவாசன் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா். அதைத் தொடா்ந்து பாஜகவினரை நகர போலீஸாா் கைது செய்து, பின்னா் விடுவித்தனா்.

தேர்தல் போட்டி தீர்வாகுமா?

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவு நாள்: அதிமுகவினா் அஞ்சலி

ஜதிபல்லக்கில் தேசிய கவிஞர் பாரதியார்!

கல்லீரல் பாதித்த பள்ளி மாணவா்களுக்கு முன்னாள் அமைச்சா் நிதியுதவி

நூறு நாள் வேலை கோரி அரசுப் பேருந்தை சிறைபிடித்த கிராம பெண்கள்

SCROLL FOR NEXT