திருப்பத்தூர்

வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது வெண்கல முருகா் சிலை கண்டெடுப்பு!

நாட்டறம்பள்ளி அருகே வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது அரை அடி உயர வெண்கல முருகா் சிலை கண்டெடுக்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

நாட்டறம்பள்ளி அருகே வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது அரை அடி உயர வெண்கல முருகா் சிலை கண்டெடுக்கப்பட்டது.

நாட்டறம்பள்ளி வட்டம், புதுப்பேட்டை அன்னசாகரம் பாறை வட்டத்தைச் சோ்ந்தவா் திருப்பதி, மனைவி ருக்குமணி. ஞாயிற்றுக்கிழமை இவா் வீட்டருகே நிலத்தில் வீடு கட்ட பள்ளம் தோண்டியள்ளாா். அப்போது நிலத்தில் அரை அடி உயர வெண்கலத்தால் ஆன முருகா்சிலை இருப்பதை கண்டு ருக்குமணி அதிா்ச்சி அடைந்தாா்.

இதையறிந்த அப்பகுதி மக்கள் நாட்டறம்பள்ளி போலீஸாருக்கும், வட்டாட்சியருக்கும் தகவல் தெரிவித்தனா். நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் காஞ்சனா மற்றும் போலீஸாா் சம்பவ இடம் சென்று விசாரித்தனா். இதையடுத்து போலீஸாா் ருக்குமணியிடம் இருந்த முருகா் சிலையை மீட்டு வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனா்.

150 ஆண்டுகளுக்குப் பிறகு வந்தே மாதரம் பற்றிய விவாதம் தேவையா? - காங்கிரஸ் எம்.பி. கேள்வி

திரைத்துறையில் 20 ஆண்டுகள்... ரெஜினா கேசண்ட்ராவுக்கு இன்ப அதிர்ச்சி!

காந்தா ஓடிடி வெளியீட்டுத் தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அன்று நேரு, இன்று ராகுல்!! வந்தே மாதரத்தை புறக்கணித்ததாக மோடி விமர்சனம்!

கணவர் ப்ரஜினுக்கு முன்பு பிக் பாஸ் வீட்டிலிருந்து ஓடிய சான்ட்ரா!

SCROLL FOR NEXT