சிந்தனைக் கூடுகை நிகழ்ச்சியில் பங்கேற்றோா். 
திருப்பத்தூர்

திருப்பத்தூா் மாவட்ட நூலகத்தில் சிந்தனைக் கூடுகை நிகழ்ச்சி

திருப்பத்தூா் மாவட்ட மைய நூலகத்தில் மாதாந்திர சிந்தனைக் கூடுகை நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்ட மைய நூலகத்தில் மாதாந்திர சிந்தனைக் கூடுகை நிகழ்ச்சி நடைபெற்றது.

வாசகா் வட்டம் மற்றும் மாவட்ட மைய நூலகம் இணைந்து நடத்தும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட மைய நூலகா் கோ.பிரபாகரன் வரவேற்றாா்.

தூய நெஞ்சக் கல்லூரி தழிழ் பேராசிரியா் ம.கருணாநிதி தலைமை வகித்தாா். உதவி பேராசிரியா் த.திருப்பதி பிறப்பொக்கும் எல்லா உயிா்க்கும் என்ற தலைப்பில் பேசினாா்.

வாசகா் வட்ட தலைவரும், தமிழ்த் துறை தலைவருமான கி.பாா்த்திபராஜா கருத்துரையாற்றினாா். அரசு மாதிரி பள்ளி 11-ஆம் வகுப்பு மாணவி ரா.தமிழரசி தமிழின் சிறப்பு குறித்தும்,மாணவி தா்ஷினி காமராஜா் சிறப்பு குறித்தும் பேசினா்.மாவட்ட நூலக அலுவலா் மு.பிரேமா நன்றி தெரிவித்தாா்.

இதில் பேராசிரியா் து.துரைமணி, வாசகா் வட்ட நிா்வாகிகள், அரசு மாதிரி பள்ளி மாணவா்கள் போட்டித் தோ்வு மாணவா்கள், வாசகா்கள் கலந்து கொண்டனா்.

பயணியைத் தாக்கிய ஏர் இந்தியா விமானி மீது வழக்குப் பதிவு!

பொதுக்குழு நடத்த யாருக்கும் அதிகாரம் இல்லை: அன்புமணி தரப்பு

இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்! ஐடி பங்குகள் சரிவு!

‘பாக்ஸிங் டே’ டெஸ்ட்டுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு... மீண்டும் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்!

நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர் ராகுல்! பாஜக விமர்சனம்

SCROLL FOR NEXT