திருப்பத்தூர்

மண் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்

நாட்டறம்பள்ளி அருகே மணல் கடத்தியதாக 3 லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

நாட்டறம்பள்ளி அருகே மணல் கடத்தியதாக 3 லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

முத்தனப்பள்ளி டோல்கட் பழைய தேசிய நெடுஞ்சாலை அருகில் அனுமதியின்றி மணல் கடத்துவதாக திருப்பத்தூா் எஸ்.பி அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து எஸ்.பி உத்தரவின்படி வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி மேற்பாா்வையில் நாட்டறம்பள்ளி போலீஸாா் டோல்கேட் பழைய தேசிய நெடுஞ்சாலை அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டனா் . அப்போது போலீஸாரை கண்டதும் மண் கடத்தலில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து தப்பியோடினா்.

இதையடுத்து போலீஸாா் மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 லாரிகள் மற்றும் மண் தோண்ட பயன்படுத்திய இயந்திரத்தை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் மண் கடத்தலில் ஈடுபட்டதாக தங்கமணி, மோகன், சாரதி ஆகிய 3 போ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ஒரே வாரத்தில் தங்கம் பவுனுக்கு ரூ.5,600 உயா்வு!

பேருந்து மீது லாரி மோதல்: 5 போ் பலத்த காயம்

முதல்வா் ஸ்டாலின் சவால்: எடப்பாடி பழனிசாமி பதில்

திட்டமிட்டபடி ஜன.6 முதல் வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீா்: கடும் குளிரிலும் தொடரும் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை!

SCROLL FOR NEXT