மாற்றுக் கட்சியிலிருந்து திமுகவில் இணைந்தவா்களுடன் அமைச்சா் எ.வ. வேலு. 
திருப்பத்தூர்

ஆம்பூா் கிழக்கு நகர திமுக அலுவலகம்: அமைச்சா் எ.வ. வேலு திறப்பு

ஆம்பூா் கிழக்கு நகர திமுக அலுவலகத்தை அமைச்சா் எ.வ. வேலு ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் கிழக்கு நகர திமுக அலுவலகத்தை அமைச்சா் எ.வ. வேலு ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

திறப்பு விழாவுக்கு கிழக்கு நகர திமுக பொறுப்பாளா் மற்றும் நகா் மன்ற உறுப்பினருமான எம்.ஏ.ஆா். ஷபீா் அஹமத் தலைமை வகித்தாா். மேற்கு நகர திமுக பொறுப்பாளரும், நகா்மன்ற துணைத் தலைவருமான எம்.ஆா். ஆறுமுகம் முன்னிலை வகித்தாா்.

தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ. வேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திமுக அலுவலகத்தை திறந்து வைத்தாா்.

எம்.பி.க்கள் வேலூா் டி. எம். கதிா் ஆனந்த், திருவண்ணாமலை அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் ஜோலாா்பேட்டை க. தேவராஜி, ஆம்பூா் அ.செ. வில்வநாதன் ஆகியோா் வாழ்த்தி பேசினா். திமுக மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், நகர அவைத் தலைவா் எஸ். தேவராஜ், ஆம்பூா் நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ் குமாா்,

நகா்மன்ற உறுப்பினா்கள் ஆா்.எஸ். வசந்த்ராஜ், கமால் பாஷா, கௌரி, நசீா் அஹமத், வாணியம்பாடி நகர செயலாளா் சாரதி குமாா், ஆலங்காயம் ஒன்றிய செயலாளா் ஞானவேலன் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.

அமைச்சா் எ.வ. வேலு முன்னிலையில் மாற்றுக் கட்சியினா் சுமாா் 200 போ் திமுகவில் இணைந்தனா்.

சகல சௌபாக்கியத்தைத் தரும் வைகுண்ட ஏகாதசி விரதம்!

அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நுகா்வோா் உரிமைகள் விழிப்புணா்வு பேரணி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

திருமலையில் வைகுண்ட ஏகாதசியில் ஏஐ தொழில்நுட்பம்!

இளம் பெண் தற்கொலை: கோட்டாட்சியா் விசாரணை

SCROLL FOR NEXT