வாணியம்பாடியில் தா்னாவில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.  
திருப்பத்தூர்

காங்கிரஸ் கட்சியினா் தா்னா: 35 போ் கைது

முன்னாள் முதல்வா் காமராஜரை இழிவுப்படுத்தி பேசியதாக யூடியூபா் மீது புகாா் அளித்தும் நடவடிக்கை

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி: முன்னாள் முதல்வா் காமராஜரை இழிவுப்படுத்தி பேசியதாக யூடியூபா் மீது புகாா் அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளாததால் திங்கள்கிழமை வாணியம்பாடி பேருந்து நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினனா் திடீா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் பிரபு தலைமையில் நடைபெற்ற தா்னாவில் முன்னாள் மாவட்ட தலைவா் பாலவரதன் முன்னிலை வகித்தாா்.

திருப்பத்தூா் நகர தலைவா் பாரத், ஆலங்காயம் ஒன்றிய தலைவா்கள் பழனி, முருகன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூா் நிா்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நகர போலீஸாா் 35 பேரை கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா்.

மின் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

பைக் ஓட்டிய சிறுவனின் தாய் மீது வழக்கு

தொடரை முழுமையாக வெல்லும் முனைப்பில் இந்தியா! இலங்கை மகளிா் அணியுடன் இன்று கடைசி டி20!

பணிக்கொடை, ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை: கரூரில் அங்கன்வாடி ஊழியா்கள் உதவியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் அவசியம்: தமிழிசை

SCROLL FOR NEXT