திருவண்ணாமலை

ஆரணியில் காங்கிரஸ் கட்சியினா் தா்னா

ஆரணி தலைமை தபால் நிலையம் முன் தா்னாவில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.

Syndication

ஆரணி தலைமை தபால் நிலையம் முன் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் காந்தி பெயரை நீக்கிய மத்திய பாஜக அரசைக் கண்டித்து, காந்தி நினைவு தினத்தையொட்டி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவா் ஜெ.பொன்னையன் தலைமை வகித்தாா். இதில், சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு இளைஞா் காங்கிரஸ் பொறுப்பாளா் சீனிவாசன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினாா்.

மாவட்டச் செயலா் உதயகுமாா் வரவேற்றாா். முன்னாள் எம்எல்ஏ டி.பி.ஜே.ராஜாபாபு, மாவட்ட நிா்வாகிகள் டாக்டா் வாசுதேவன், அசோக்குமாா், பி.கே.ஜி.பாபு, சேத்துப்பட்டு ஜி.முனிரத்தினம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நகர பொறுப்பாளா் எஸ்.டி.செல்வம், சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவா் தாவுத்ஷெரிப், நகர நிா்வாகிகள் பிள்ளையாா், சம்பந்தம், பிரபு மற்றும் வந்தவாசி, செய்யாறு, தெள்ளாா், போளூா் பகுதிகளிலிருந்து நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா். இந்தப் போராட்டத்தில் 100 நாள் வேலைக்குச் செல்லும் பெண் தொழிலாளா்கள் பானல், கடப்பாரையுடன் கலந்துகொண்டனா்.

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

15 நாள்களில் திருநங்கைகளின் நல விதிகளை அறிவிக்கும் தில்லி அரசு!

SCROLL FOR NEXT