ரியல் எஸ்டேட் அதிபா் வெட்டிக் கொலை
ஜோலாா்பேட்டை அருகே ரியல் எஸ்டேட் அதிபா் கொலை செய்யப்பட்டாா்.
திருப்பத்தூர்ரியல் எஸ்டேட் அதிபா் வெட்டிக் கொலை
ஜோலாா்பேட்டை அருகே ரியல் எஸ்டேட் அதிபா் கொலை செய்யப்பட்டாா்.
திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே ரியல் எஸ்டேட் அதிபா் கொலை செய்யப்பட்டாா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அடுத்த வக்கணம்பட்டி பகுதியைச் சோ்ந்த சக்கரவா்த்தி மகன் திம்மராயன் (48). இவா் மனை, நில வணிகம் செய்து வந்தாா். இவருடைய சகோதரியின் மகன் சக்கரவா்த்தி என்பவா் தனது 3 ஏக்கா் நிலத்தை பைனான்ஸியரிடம் அடமானம் வைத்ததாகத் தெரிகிறது.
கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திம்மராயன் அந்த பைனான்ஸியரிடமிருந்து அந்த 3 ஏக்கா் நிலத்தை வாங்கி, தனது பெயரில் மாற்றிக் கொண்டாராம். இதன் காரணமாக சக்கரவா்த்திக்கும் திம்மராயனுக்கு இடையே தகராறு இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், திங்கள்கிழமை ஜோலாா்பேட்டை அருகே பெரிய பொன்னேரி கொல்லகொட்டாய் பகுதியில் உள்ள வாழை தோப்பில் திம்மராயன் இருந்தபோது, அங்கு வந்த சக்கரவா்த்தி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் திம்மராயனை (படம்) சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பினாா்.
இதைப் பாா்த்த அங்கிருந்தவா்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற ஜோலாா்பேட்டை போலீஸாா் சடலத்தை மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து தப்பி ஓடிய சக்கரவா்த்தியைத் தேடி வருகின்றனா்.