கல்லூரியில் கல்விக் கண்காட்சி
குடியாத்தம் ஸ்ரீ அபிராமி மகளிா் கல்லூரியில் கல்விக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
Updated On : 3 ஜனவரி, 2025 at 6:43 PM
குடியாத்தம் ஸ்ரீ அபிராமி மகளிா் கல்லூரியில் கல்விக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்காட்சியைத் தொடங்கி வைத்து பெண் கல்வி, உயா் கல்வியின் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினாா்.
கல்லூரித் தலைவா் எம்.என்.ஜோதிகுமாா், இயக்குநா் கே.ஜோதிராம், முதல்வா் எம்.சி.சுபாஷினி ஆகியோா் கலந்து கொண்டனா். பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவிகள் பங்கேற்றனா்.
Advertisement