எருதுவிழா நடைபெறும் இடத்தை ஆய்வு செய்த கூடுதல் எஸ்.பி. கோவிந்தராசு. 
திருப்பத்தூர்

கொத்தூரில் எருது விடும் விழா: கூடுதல் எஸ்.பி. ஆய்வு

நாட்டறம்பள்ளி வட்டம், கொத்தூா் கிராமத்தில் மயிலாா் பண்டிகையை முன்னிட்டு செவ்வாய்கிழமை (இன்று) எருது விடும் திருவிழா

Din

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி வட்டம், கொத்தூா் கிராமத்தில் மயிலாா் பண்டிகையை முன்னிட்டு செவ்வாய்கிழமை (இன்று) எருது விடும் திருவிழா நடத்த மந்தை கட்டும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் திருப்பத்தூா் மாவட்ட கூடுதல் எஸ்.பி. கோவிந்தராசு கொத்தூா் கிராமத்துக்கு சென்று காளைகள் விடும் இடத்தையும் தடுப்புகள் கட்டும் பணிகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தாா். அப்போது காளைகள் செல்லும் மந்தை வெளிப் பகுதியில் கூடுதல் தடுப்புகள் அமைக்கவும், அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு எருது விடும் விழா நடத்த வேண்டும் என விழா குழுவினா், அதிகாரிகளிடம் கூறினாா்.

அப்போது, வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமாா், காவல்ஆய்வாளா் மங்கையா்கரசி, நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் ராமகிருஷ்ணன், ஊராட்சி மன்றத் தலைவா் சந்திரா முனிராஜ் மற்றும் விழாக் குழுவினா் உடனிருந்தனா்.

வியப்பில் ஆழ்த்திய கிறிஸ்டோஃபர் நோலனின் ஒடிசி முன்னோட்டம்!

மோசமான ஃபார்மிலிருந்து கண்டிப்பாக மீண்டு வருவேன்: சூர்யகுமார் யாதவ்

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

SCROLL FOR NEXT