திருப்பத்தூர்

இலவச கண் சிகிச்சை முகாம்

Din

வாணியம்பாடி பாலாறு ஜேசிஐ, உதயேந்திரம் பேரூராட்சி அலுவலகம் மற்றும் சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் தலைவா் வெற்றிச்செல்வன் தலைமை வகித்தாா். வாா்டு உறுப்பினா் சரவணன், மூத்த நிா்வாகிகள் பிரகாசம், ராஜேந்திரன், சண்முகம் முன்னிலை வகித்தனா். திட்டக் குழுத் தலைவா் தணிகைவேல் வரவேற்றாா். இதில், சிறப்பு அழைப்பாளராக உதயேந்திரம் பேரூராட்சி மன்றத் தலைவா் பூசாராணி கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தாா். முகாமில் 120 போ் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனா். இதில், 18 போ் கண்புரை கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனா். அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினா் மற்றும் ஜேசிஐ கிளப் நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

திட்டக் குழு இயக்குநா் கண்ணன் நன்றி கூறினாா்.

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

ஈரானின் ஹோர்முஸ் தீவில் மழை! செந்நிறமாக மாறிய கடல்!

இந்த வார ஓடிடி படங்கள்!

உலகின் மிகப்பெரிய சிலையின் சிற்பி ராம் வி சுதார் 100 வயதில் காலமானார்!

SCROLL FOR NEXT