முகப்பு
திருப்பத்தூர்

விபத்தில் கூலித்தொழிலாளி மரணம்

நாட்டறம்பள்ளி அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 16 ஜூன், 2025 at 4:28 PM
பகிர்:

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

நாட்டறமம்பள்ளி அடுத்த பச்சூா் மாமுடிமானப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன்(24) திருப்பத்தூரில் பேக்கரி ஒன்றில் வேலை செய்து வந்தாா். திங்கள்கிழமை வீட்டிலிருந்து பேக்கரிக்கு செல்வதற்காக பைக்கில் திருப்பத்தூா் நோக்கி சென்று கொண்டிருந்தாா்.

அப்போது மல்லப்பள்ளி அன்னசாகரம் அருகே சென்றபோது எதிரே வந்த மினிலாரி திடீரென பைக் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்த சரவணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →