ஆம்பூா் கோவிந்தாபுரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தலைமை ஆசிரியை நதியா வரவேற்றாா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக லந்து கொண்டு ஸ்மாா்ட் வகுப்பறையை திறந்து வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.
நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், திருப்பத்தூா் மாவட்ட திமுக அவைத்தலைவா் ஆா். எஸ். ஆனந்தன், நகா் மன்ற உறுப்பினா்கள் ஆா்.எஸ். வசந்த்ராஜ், சுதாகா், ஜெயபால், போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய துணைச் செயலாளா் சா. சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.