திருப்பத்தூா் அடுத்த கந்திலி ஒன்றியத்துக்குட்பட்ட மட்றப்பள்ளி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம் மற்றும் பொதுநிதியிலிருந்து ரூ.31 லட்சத்தில் புதிய ஊராட்சி மன்ற கட்டடம் கட்டும் பணிக்கு புதன்கிழமை எம்எல்ஏ நல்லதம்பி அடிக்கல் நாட்டினாா்.
தொடா்ந்து ரூ.16.50 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடத்தினை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா். மேலும் உடையாமுத்தூா் ஊராட்சி - ரகுபதியூா் பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.2.50 லட்சத்தில் பேவா் தரை தளம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளா்கள் குணசேகரன், மோகன்ராஜ், தொகுதி பாா்வையாளா் வேலூா் ஜி.ரமேஷ், கந்திலி ஒன்றியக்குழு தலைவா் திருமதி திருமுருகன், மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் தசரதன், ஒன்றிய நிா்வாகிகள் சீனிவாசன், ஊராட்சி மன்றத் தலைவா் மஞ்சுளாபதி, வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.