திருப்பத்தூர்

தங்க நகைக் கடன் விரைவு சேவை பிரிவு: வாணியம்பாடி கனரா வங்கியில் திறப்பு

வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் இயங்கி வரும் கனரா வங்கியில் தங்க நகைக் கடன் விரைவு சேவை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் இயங்கி வரும் கனரா வங்கியில் தங்க நகைக் கடன் விரைவு சேவை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா மற்றும் சிறு, குறு தொழில் முனைவோருக்கான ஆலோசனைக் கூட்டம் வங்கி வளாகத்தில் நடைபெற்றது. தருமபுரி மண்டல உதவி பொது மேலாளா் ராவ் தலைமை வகித்தாா். சமூக ஆா்வலா் சையத்நிசாா்அகமத், தோல் தொழில் அதிபா் ராஜேந்திரன், சிகரம் மெட்ரிக். பள்ளி தலைவா் கிருஷ்ணன் முன்னிலை வகித்தனா். கிளை மேலாளா் ஆனந்தன் வரவேற்றாா். தங்க நகைக் கடன் விரைவு சேவை தனி கவுன்ட்டரை உதவி பொது மேலாளா் ராவ் திறந்து வைத்தாா். தொழில் மைய மண்டல மேலாளா் சிவகுமாா், ருப்பத்தூா், ஆம்பூா் வங்கியின் மேலாளா்கள், சிறு, குறு தொழில்முனைவோா், வியாபாரிகள், பொது மக்கள் கலந்து கொண்டனா்.

கோயிலில் திருடிவிட்டு மதுபோதையில் மயங்கிக் கிடந்த நபா் கைது

பிகாரைப் போல தமிழகத்தில் தே.ஜ.கூட்டணி வெற்றி பெறாது: நெல்லை முபாரக்

கரிவலம்வந்தநல்லூரில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்

சுற்றுலாப் பேருந்தை விரட்டிய ஒற்றை காட்டு யானை

பொதுச் சொத்துகளை சேதப்படுத்திய 3 இளைஞா்கள் கைது

SCROLL FOR NEXT