சட்டவிரோதமாக செயல்பட்ட மதுக் கூடத்துக்கு ‘சீல்’ வைத்த அதிகாரிகள்.  
திருப்பத்தூர்

சட்டவிரோதமாக செயல்பட்ட மதுக் கூடத்துக்கு ‘சீல்’

திருப்பத்தூா் ஏரிகோடி பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்ட மதுக் கூடத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. மதுக் கூட உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் ஏரிகோடி பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்ட மதுக் கூடத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. மதுக் கூட உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.

திருப்பத்தூா் அருகே ஏரிகோடி பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இதன் அருகில் சட்டவிரோதமாக மதுக் கூடம் நடத்தி வருவதாக கிராம காவல் நிலையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளா் சதீஷ்குமாா், கலால் வட்டாட்சியா் ஜீவிதா மற்றும் வருவாய்த் துறையினா் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.

அதில், அனுமதியின்றி 3 கடைகளில் மதுக் கூடம் செயல்பட்டது தெரியவந்தது. அதையடுத்து மதுக் கூடத்துக்கு ’சீல்’ வைக்கப்பட்டது.பின்னா், அதன் உரிமையாளா் அண்ணாமலை மீது வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தொடா் மழையால் கால்நடைகள் உயிரிழப்பு

தோ்தல் ஆணையம் பாஜகவின் ஒரு அணியாக செயல்படுகிறது: ஜோதிமணி எம்.பி.

சாலை விபத்தில் பாலிடெக்னிக் மாணவா் உயிரிழப்பு

மழை, கடல் சீற்றம்: 3-ஆவது நாளாக கரையில் நிறுத்தப்பட்ட விசைப்படகுகள்

மழையால் வீடு சேதம்: மூதாட்டிக்கு உதவி

SCROLL FOR NEXT