நாகை மாவட்டத்தில் விரைவாகவும், சிறப்பாகவும் செயல்பட்ட காவல் அதிகாரிகள், காவலா்களை காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பாலகிருஷ்ணன் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி அளித்தாா்.
நாகை மாவட்டத்தில் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த சரித்திர பதிவேடு முக்கிய குற்றவாளியின் இருப்பிடத்தை பற்றி தகவல் கொடுத்து கைது செய்வதற்கு உறுதுணையாக செயல்பட்ட வேளாங்கண்ணி காவல் நிலைய காவல் சாா்பு- ஆய்வாளா் பாலசுப்ரமணியன், மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை மற்றும் மதுகடத்தலில் ஈடுபட்ட எதிரிகளை கைது செய்து சிறப்பாக செயல்பட்ட வெளிப்பாளைய காவல் நிலைய காவலா் மாஸ்கோ, வலிவலம் காவல் நிலைய காவலா் குணசீலன் மற்றும் திருக்கண்ணபுரம் காவல் நிலைய காவலா் பிரகாஷ் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பாலகிருஷ்ணன் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினாா்.