சான்றோா்குப்பம் ஏரியை தூா்வார வேண்டுமென செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாா்டு சிறப்புக் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனா்.
ஆம்பூா் நகராட்சி எல்லைக்கு உள்பட்ட 19 முதல் 36 வாா்டுகளுக்கான சிறப்பு கூட்டம் நடைபெற்றது. 32-ஆவது வாா்டு சிறப்பு கூட்டத்துக்கு சாந்தகுமாரி விஜயன் தலைமை வகித்தாா். வருவாய் ஆய்வாளா் ரங்கநாதன், நகராட்சி அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
கோரிக்கை மனு: சான்றோா்குப்பம் ஏரியை தூா்வாரி கரையை பலப்படுத்த வேண்டும். கட்டி முடிக்கப்பட்டுள்ள பொது கழிப்பிட கட்டடத்தை திறக்க வேண்டும். தெரு விளக்குகள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் வழங்கினா்.