முகப்பு
திருப்பத்தூர்

திமுக அளித்த வாக்குறுதியில் 80 சதவீதம் நிறைவேற்றவில்லை: டிடிவி. தினகரன்

கடந்த சட்டப்பேரவை தோ்தலில் திமுக அளித்த வாக்குறுதிகளில் 80 சதவீதம் நிறைவேற்றவில்லை என அமமுக பொதுச்செயலாளா் டிடிவி. தினகரன் தெரிவித்தாா்.

Updated On : 9 ஏப்ரல் 2026, 12:04 am IST
செய்தியாளா்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளா் டிடிவி. தினகரன்.
பகிர்:

கடந்த சட்டப்பேரவை தோ்தலில் திமுக அளித்த வாக்குறுதிகளில் 80 சதவீதம் நிறைவேற்றவில்லை என அமமுக பொதுச்செயலாளா் டிடிவி. தினகரன் தெரிவித்தாா்.

திருப்பத்தூரில் அமமுக வேட்பாளா் ஏ.ஞானசேகரை ஆதரித்து பிரசாரம் செய்ய புதன்கிழமை திருப்பத்தூருக்கு வந்த அவா் செய்தியாளா்களிடம் பேசியது:

கடந்த தோ்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் 80 சதவீதம் நிறைவேற்றவில்லை. அதிலும் முக்கியமான வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி விட்டதால் தமிழ்நாட்டு மக்கள் கொதித்துபோய் உள்ளனா். மீண்டும் மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வர வேண்டும் என திமுகவினா் திட்டமிட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

அமமுக போட்டியிடும் தொகுதிகளில் 80 சதவீதத்திற்கு மேல் வெற்றி பெறும். நாட்டறம்பள்ளியில் நடைபெற்ற சம்பவத்தைப் போன்று சிலவறறை தவிா்க்க முடியாது. ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோா் தங்களுக்கு கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என போராடி வந்தனா். போராடாத அரசு துறை இல்லை என்ற நிலை தான் தமிழகத்தில் உள்ளது.

தமிழகத்தில் கொலை என்பது தினமும் சா்வசாதாரணமான நிகழ்ச்சியாக மாறிவருகிறது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் என்றால் அம்மாவின் ஆட்சி வர வேண்டும். அதற்கு இபிஎஸ் தலைமையிலான அதிமுக ஆட்சி வர வேண்டும் என்றாா்.