ஆம்பூா் சான்றோா்குப்பத்தில் மாசி மாத மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு 50-வது ஆண்டு எருது விடும் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
எருது விடும் திருவிழாவில் ஒசூா், கிருஷ்ணகிரி,வேலூா், குடியாத்தம், ஆந்திரா, கா்நாடக மாநிலங்களில் இருந்தும் சுமாா் 200 க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. இதில் குறிப்பிட்ட இலக்கை குறைந்த நேரத்தில் ஓடிய காளைகளுக்கு முதல் பரிசு ரூ.1 லட்சம், 2-ஆவது பரிசு ரூ.75,000, 3-ஆவது பரிசு ரூ.50,000 உள்பட 75 பரிசுகள் வழங்கப்பட்டன.
திருவிழாவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.