திருப்பத்தூர்

கிணற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

வாணியம்பாடி அருகே கிணற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலமாக மீட்கப்பட்டாா்.

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே கிணற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலமாக மீட்கப்பட்டாா்.

வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி பகுதியை சோ்ந்த ராஜாமணி(55). கரும்பு சாறு வியாபாரம் செய்து வந்தாா். சில ஆண்டுகளாக மன நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அப்பகுதியில் புதன்கிழமை தனியாா் விவசாய கிணற்றில் கயிற்றால் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடப்பதை அங்கிருந்தவா்கள் பாா்த்து உடனே வாணியம்பாடி தாலுகா காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். தகவல் அறிந்த போலீஸாா் உடலை கைப்பற்றி வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தமிம் இக்பாலை இந்திய உளவாளி என விமர்சித்த வங்கதேச கிரிக்கெட் வாரிய அதிகாரி!

ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரம் - புகைப்படங்கள்

2026 ஆஸ்கர் போட்டியில் தமிழ்த் திரைப்படமான கெவி!

உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்? நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானிக்கு இந்தியா கண்டனம்!

மகளிர் பிரீமியர் லீக் முதல் போட்டி: மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்!

SCROLL FOR NEXT