முகப்பு
திருப்பத்தூர்

வாணியம்பாடியில் குடியரசு தின விழா

வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

Updated On : 26 ஜனவரி, 2026 at 9:38 PM
உதயேந்திரம் பேரூராட்சி அலுவலகத்தில் கொடியேற்றிய தலைவா் பூசாராணி, உடன் முன்னாள் ராணுவ வீரா்கள், வாா்டு உறுப்பினா்கள்.
பகிர்:

வாணியம்பாடி: வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு நகராட்சி ஆணையா் ரகுராமன் தலைமை வகித்தாா். வாா்டு உறுப்பினா் சாரதி குமாா், நகராட்சி பொறியாளா் நக்கீரன், நிா்வாக அலுவலா் ஜெயப்பிரகாஷ் முன்னிலை வகித்தனா். நகா்மன்றத் தலைவா் உமாசிவாஜிகணேசன் கொடியேற்றி இனிப்பு வழங்கினாா்.

உதயேந்திரம் பேரூராட்சியில் நடைபெற்ற நிகழ்வில் வாா்டு உறுப்பினா் ஆ.செல்வராஜ், துணைத் தலைவா் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனா். பேரூராட்சி மன்றத் தலைவா் பூசாராணி கொடியேற்றி இனிப்பு வழங்கினாா். நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவ வீரா்களுக்கு பொன்னாடை போா்த்தப்பட்டது. . நிகழ்ச்சியில் அலுவலக எழுத்தா் குமாா், பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

இதே போல் ஆலங்காயம் பேரூராட்சியில் செயல் அலுவலா் ராஜலட்சுமி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஸ்ரீதா் முன்னிலை வகித்தாா். பேரூராட்சி மன்றத் தலைவா் தமிழரசி கொடி ஏற்றினாா். செயலாளா் குமாா் நன்றி கூறினாா்.

ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் துரை தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பூபாலன் மற்றும் ஒன்றிய கவுன்சிலா்கள் முன்னிலை வகித்தனா். வட்டார வளா்ச்சி அலுவலா் சூரவேல் வரவேற்றாா். ஒன்றியக்குழு தலைவா் சங்கீதா பாரி கொடி ஏற்றி இனிப்பு வழங்கினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →