மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்
வெள்ளக்குட்டை அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய ஒன்றியக் குழு தலைவா் சங்கீதா பாரி.
Updated On : 28 ஜனவரி, 2026 at 9:46 PM
வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவுக்கு, பள்ளித் தலைமையாசிரியா் மாதையன் தலைமை வகித்து வரவேற்றாா். ஊராட்சி மன்றத் தலைவா் கவிதா திருமலை, துணைத் தலைவா் கோபி முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளராக ஆலங்காயம் ஒன்றியக் குழு தலைவா் சங்கீதா பாரி கலந்துகொண்டு, 11-ஆம் வகுப்பு பயிலும் 69 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.
Advertisement
பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் திவ்யா தவமணி, மாணவா்கள், பெற்றோா், ஊா் மக்கள் கலந்து கொண்டனா்.