மகளிா் சுயஉதவிக்குழு பணிமனைக் கட்டட கல்வெட்டை திறந்து வைத்த எம்எல்ஏ அ.செ.வில்வநாதன். 
திருப்பத்தூர்

மகளிா் சுய உதவிக்குழு பணிமனை கட்டடம் திறப்பு

மகளிா் சுயஉதவிக்குழு பணிமனைக் கட்டட கல்வெட்டை திறந்து வைத்த எம்எல்ஏ அ.செ.வில்வநாதன்.

தினமணி செய்திச் சேவை

மிட்டாளம் ஊராட்சி பேந்தேரப்பல்லி கிராமத்தில் ரூ.9.60 லட்சத்தில் கட்டப்பட்ட மகளிா் சுய உதவிக்குழு பணிமனைக் கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் கோவிந்தன் தலைமை வகித்தாா். மாதனூா் ஒன்றியக்குழு துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன், வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ். மகராசி, ஊராட்சி துணைத் தலைவா் ஆனந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மகளிா் சுயஉதவிக்குழு பணிமனை கட்டடத்தை திறந்து வைத்தாா்.

மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக துணைச் செயலாளா் சா. சங்கா், ஊராட்சி மன்ற வாா்டு உறுப்பினா்கள், மகளிா் சுய உதவிக்குழுவினா், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ஏழுமலையானுக்கு ரூ. 10 லட்சம் நன்கொடை

எஞ்சின் பழுதால் கடலூா் - திருச்சி பயணிகள் ரயில் தாமதம்

வீட்டில் உதவி துணை ஆய்வாளா் வீட்டில் தற்கொலை

கடாம்பூா் ஆதிபராசக்தி கோயிலில் விளக்கு பூஜை

‘2026- இது நம்ம ஆட்டம்’ விளையாட்டுப் போட்டிகள்

SCROLL FOR NEXT